Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/நல்லதைச் செய்யும் நாளே நல்லநாள்

நல்லதைச் செய்யும் நாளே நல்லநாள்

நல்லதைச் செய்யும் நாளே நல்லநாள்

நல்லதைச் செய்யும் நாளே நல்லநாள்

ADDED : ஜூலை 29, 2008 04:06 PM


Google News
Latest Tamil News
<P>ஞானியரின் ஒரே மொழி அமைதி. பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்க பழகிக் கொள்ள வேண்டும். இப்பழக்கம் ஒருவருக்குப் பலவழிகளில் உதவும். கால் தடுக்கிய காயம் ஆறிவிடும். ஆனால், நாக்குத்தவறியதால் உண்டாகும் பழிச் சொற்கள் வாழ்நாள் முழுவதும் நிலைத்துவிடும்.<BR>*நாக்கால் பொய் பேசுதல், புறங்கூறுதல், அளவுக்கு அதிகமாகப் பேசுதல், குற்றமுடையவற்றைப் பேசுதல் ஆகிய குற்றங்களைச்செய்யக்கூடாது.<BR>* பிறரை விமர்சிப்பது, குற்றம் காண்பது ஆகியவை ' தான்' எனும் அகம்பாவத்தினால் உண்டாவதாகும். இதற்குப் பதிலாக உங்கள் குற்றங்களை மனக்கண் முன் பரிசீலனை செய்யுங்கள். இந்த எண்ணத்தால் நம்மைத் திருத்திக் கொள்ள முடியும். <BR>* இறைவனின் திருவடிகளைப் போற்றுதல், பசித்தவர்களுக்குப் உணவிடுதல், நல்லவர்களை சந்தித்து நல்ல விஷயங்களை அறிந்து கொள்ளுதல் போன்ற செயல்களைச் செய்யும் நாட்களே பயனுள்ளவையாகும். <BR>* கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய உறுப்புக்களே துணையாகவும், தொல்லையாகவும் அமைந்துள்ளன. இந்த உறுப்புகளுக்கு அடிமையாகும் மனிதனுக்கு வேறு பகைவர்கள் தேவையில்லை. ஆனால், இந்த உறுப்புகளை அடக்கியாளக் கற்றுக் கொண்டால் அவை உதவி செய்யும் நண்பர்களாக மாறி விடும். </P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us